வள்ளிக் குறத்தி: இயற்கை
வள்ளிக் குறத்தி: இயற்கை முருகனுக்கு இரு மனைவிகளாமே. அதில் தினைபுனம் காத்த ஆலோலம் பாடிக் கொண்டிருந்த வள்ளியை அண்ணன் விக்னேஷை யானையாக அனுப்பி பயமுறுத்தி பயந்த வள்ளி வந்து முருகனின் மார்பில் ஒட்டிக் கொண்டாளாமே... 30 வருடங்களாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளாவது உங்களோடு பேசலாமே என்றிருந்தேன் என்றாள் அந்தப் புதிய பாதையில் இருவரும் இணையாக சென்று கொண்டிருந்த சில மணித் துளிகளில். நானும் உன்னைப் பார்த்திருக்கிறேன் அந்தப் பொது வாழ்வின் புண்ணியாத்மாவாக நீ பணி புரிந்த நிறுவனம் ஒன்றுக்கு நான் வந்த போது இல்லை இல்லை அதற்கும் முன்பாகவே அவளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இருவரும் பேசிக் கொண்டதே இல்லை. முப்பது ஆண்டுகளானாலும் மூன்று நொடிகளானாலும் எண்ணம் வலுவாக இருந்தால் அது ஒரு நாள் பலிக்கும் என்றான் மற்றொரு நாள் அவள் வீட்டின் வாசலில் பேசினார்கள் சிறிதளவு மறுபடியும் ஒர் நாள் அவள் அவனுக்காகவே காத்திருந்து இன்னும் சில நாட்களில் அந்த குடி இருப்பிலிருந்து வேறு குடியிருப்புக்கு மாறவிருப்பதாக கூறினாள் மற்றும் ஒரு நாள் அந்த அதிகாலையில் மற்றொரு ஊருக்கு போகப் போவதாக வலிய வந்து