ஒரு கூட்டுப் புழு பருவம்..

பாலியல் வேறுபாடு உணருமுன்னே சிறிய காம அரும்பு முளைவிடுமுன்னே தியானம் செய்யக் கற்றிருந்தால், பிரமசாரியத்துக்காக விரதம் இருந்திருந்தால், காத்திருந்த இலக்கை எட்டியிருப்பேன்...

ஆனால் ஏழாவது எட்டாவது படிக்கும் முன்பே  சில தீய சேர்க்கை உள்ளவர்களுடன் நட்பு ரீதியாக சேர்ந்து அவர்கள் இலவசமாக கூட்டிக் கொண்டு போகிறார்கள் என ஹிந்தி சினிமாவுக்கும் கூட சென்றது இன்னும் நினைவு இருக்கிறது

ஏழாம் வகுப்பு படிக்கும்போதிருந்துதான் பாலியல் பற்றியும் ஆண் பெண் பற்றியும் வேறாக நினைக்க ஆரம்பித்தது. அப்போது வயது சுமார் 12. அப்போது முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் வயது வரைதான் அதாவது 13 வயது வரைதான் வகுப்பில் முதலாவதாக மதிப்பெண் பெறுவதில் இடம் பிடித்தது. அதன் பின் சிலருடன் மன்றம் என்றும், கதைப்புத்தகம் என்றும் தொடர்கள் என்றும் மனப்பாடம் செய்து படிப்பதை தவறு என்றும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போல அடித்தொண்டையில் கட்டைக்குரலில் அதேபோல தொனியில் பேசிக் கொண்டும் திரிந்து சாதாரண மான மாணவராக மாறி இருந்தேன். திப்பு சுல்தான் கரடு எல்லாம் சென்றோம் வீட்டில் மதிப்பெண் பட்டியலில் கை எழுத்துப் போடாமல் இருந்த  காரணம் பற்றி  ஆசிரியரிடம் சொல்ல முடியாமல் அவரும் துரத்தி விட வீட்டில் பள்ளிக்கு செல்வது போலவும், பள்ளியில் வகுப்பறையில் இருந்து துரத்தப்பட்டும்....சில வகுப்புகள் சென்றன.

உண்மையில் அது போன்ற தருணங்களில்தாம் நல்ல ஆலோசனைகள் கொடுக்கப்படவேண்டிய பருவம். அது கை நழுவிப் போயிற்று. ஆனாலும் அறிவியல், தமிழ், வரலாறு புவியியல் போன்ற பாடங்களில் ஆசிரியர்க்கே சவால்விடும்படியான அறிவும் தெளிவும் இருந்து.

பள்ளியில் முதலாவது பரிசைப் பெறுமளவு பேச்சுப் போட்டிகளிலும், கவிதை ஒப்புவிப்பு போட்டிகளிலும் மற்ற தோழியரை தவிடு பொடியாக்கினேன். அறிவியல் ஆசிரியர் வரலாறு புவியியல் ஆசிரியர் மெச்சிக் கொண்டிருக்க, ஆங்கிலம், கணிதம் போன்ற ஆசிரியர்கள் மதில்மேல் பூனை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் பாயலாம் குதிக்கலாம் என்றார்கள்.

பெண்களுக்கு பிறப்புறுப்பு என்றால் அதை அறிவியல் பாடத்தில் பாடமாக வந்தது பத்தாம் வகுப்பு அல்லது பதினோராம் வகுப்பில் ஆண் பெண் பால் உறுப்பு பற்றி மேலோட்டமாகச் சொல்லப்பட்டது...ஆனால் குழந்தை எப்படி பிறப்பது என்று எல்லாம் சொல்லவில்லை தெரியாது...பெண்களின் மார்பக வளர்ச்சி மிகப் பெரிய வரலாறாகத் தெரிந்தது...மேலும் ஒரு ஆணும் பெண்ணும் அது ஆசிரியராக இருந்தாலும் பேசினாலே மிகப் பெரும் கூச்சத்துக்குரிய புரட்சியாகத் தெரிந்தது. வெட்கமாக இருந்தது. உடன் பல சகோதரி சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்து வரும் போதும்...

பிறப்பு உறுப்பில் உரு மாற்ற விளைவுகளும், அதைப் பிடிக்கும்போதும் உணர்வுகளில் வேறு பாடும் தோன்ற ஆரம்பித்தன.... அப்போது சினிமாவில் பார்த்த பாடல் ஆடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி. ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி  மற்றும் இந்திப்பட நடிகர் நடிகைகள் இப்படி யாராவது வெற்றிப் படம் கொடுத்திருந்தால் அதைப் பார்க்க நேர்ந்திருந்தால் அவர்கள் நினைப்பு நினைக்க இடம் இருந்து கொண்டிருந்தது...

உடன் கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, சுஜாதா சாண்டில்யன் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் பாலியலை சுவை படக் கூட்டினார்கள்..


Related image
ஒரு கூட்டுப் புழு பருவம்..

இயற்கை.

Comments

Popular posts from this blog

ஒன் நெனப்பு

ஆரிடம் சொல்வது காலத்தின் சூழ்ச்சியை....