பாலியல் வேறுபாடு உணருமுன்னே சிறிய காம அரும்பு முளைவிடுமுன்னே தியானம் செய்யக் கற்றிருந்தால், பிரமசாரியத்துக்காக விரதம் இருந்திருந்தால், காத்திருந்த இலக்கை எட்டியிருப்பேன்... ஆனால் ஏழாவது எட்டாவது படிக்கும் முன்பே சில தீய சேர்க்கை உள்ளவர்களுடன் நட்பு ரீதியாக சேர்ந்து அவர்கள் இலவசமாக கூட்டிக் கொண்டு போகிறார்கள் என ஹிந்தி சினிமாவுக்கும் கூட சென்றது இன்னும் நினைவு இருக்கிறது ஏழாம் வகுப்பு படிக்கும்போதிருந்துதான் பாலியல் பற்றியும் ஆண் பெண் பற்றியும் வேறாக நினைக்க ஆரம்பித்தது. அப்போது வயது சுமார் 12. அப்போது முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் வயது வரைதான் அதாவது 13 வயது வரைதான் வகுப்பில் முதலாவதாக மதிப்பெண் பெறுவதில் இடம் பிடித்தது. அதன் பின் சிலருடன் மன்றம் என்றும், கதைப்புத்தகம் என்றும் தொடர்கள் என்றும் மனப்பாடம் செய்து படிப்பதை தவறு என்றும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போல அடித்தொண்டையில் கட்டைக்குரலில் அதேபோல தொனியில் பேசிக் கொண்டும் திரிந்து சாதாரண மான மாணவராக மாறி இருந்தேன். திப்பு சுல்தான் கரடு எல்லாம் சென்றோம் வீட்டில் மதிப்பெண் பட்டியலில் கை எழுத்துப் போடாமல் இருந்த காரணம் பற்