Posts

Showing posts from May, 2019

வள்ளிக் குறத்தி: இயற்கை

Image
வள்ளிக் குறத்தி: இயற்கை முருகனுக்கு இரு மனைவிகளாமே. அதில் தினைபுனம் காத்த ஆலோலம் பாடிக் கொண்டிருந்த வள்ளியை அண்ணன் விக்னேஷை யானையாக அனுப்பி பயமுறுத்தி பயந்த வள்ளி வந்து முருகனின் மார்பில் ஒட்டிக் கொண்டாளாமே... 30 வருடங்களாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளாவது உங்களோடு பேசலாமே என்றிருந்தேன் என்றாள் அந்தப் புதிய பாதையில் இருவரும் இணையாக சென்று கொண்டிருந்த சில மணித் துளிகளில். நானும் உன்னைப் பார்த்திருக்கிறேன் அந்தப் பொது வாழ்வின் புண்ணியாத்மாவாக நீ பணி புரிந்த நிறுவனம் ஒன்றுக்கு நான் வந்த போது இல்லை இல்லை அதற்கும் முன்பாகவே அவளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இருவரும் பேசிக் கொண்டதே இல்லை. முப்பது ஆண்டுகளானாலும் மூன்று நொடிகளானாலும் எண்ணம் வலுவாக இருந்தால் அது ஒரு நாள் பலிக்கும் என்றான் மற்றொரு நாள் அவள் வீட்டின் வாசலில் பேசினார்கள் சிறிதளவு மறுபடியும் ஒர் நாள் அவள் அவனுக்காகவே காத்திருந்து இன்னும் சில நாட்களில் அந்த குடி இருப்பிலிருந்து வேறு குடியிருப்புக்கு மாறவிருப்பதாக கூறினாள் மற்றும் ஒரு நாள் அந்த அதிகாலையில் மற்றொரு ஊருக்கு போகப் போவதாக வலிய வந்து

ஆரிடம் சொல்வது காலத்தின் சூழ்ச்சியை....

Image
ஆரிடம் சொல்வது: அழகு தாஸ் அது ஒரு விமானப் பயணம். அவன் அவராக மாறி வரும் பருவம். அவளுக்கும் அப்படி ஒன்றும் இளம் பருவமல்ல... பருவம் கடந்து மத்தியப் பிரதேச வாழ்வு நிலைதான். பேர் தெரியாது ஊர் தெரிந்தாலும் சரியாகத் தெரியாது பணி தெரியும் என்றாலும் இடம்  தெரியாது. இருவரும் அடிக்கடி ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் பார்த்த நினைவு வேண்டுமென்றே அது நடக்க வில்லை. வேண்டியபடி நடந்ததோ என்னவோ. அருகருகே இருக்கை. நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். என்ன செய்கிறீர்... கற்பிக்கும் பணிதான்... எங்கே சொன்னாள் எங்கே வீடு சொன்னாள் அதன் பிறகு இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவே இல்லை அது போன்ற பொருத்தமுடைய ஒரு பெண்ணை  வாழ்வில் கண்டதில்லை.அவள் மிகவும் உரிமையுடனும் தோழமையுடனும் சாய்ந்து கொண்டாள்...இந்தப் பயணம் நீடிக்காதா என்னும்போதே அந்தப் பதினைந்து மணித் துளி பயணம் நிறைவுக்கு வர பூர்வீக சொந்தம் ஒன்று புறப்பட்டது போலிருந்தது.  அது போல் ஒரு அழகை அழகின் ஈர்ப்புடன் கண்டது கிடையாது. இனி காணமுடியுமா என்பதும் அன்று அவனுக்குத் தெரியாது...ஆனால் அப்போது நினைத்தான் அது அடிக்கடி தொடரும் பிறகு பார்த்துக